புதுக்கோட்டை

மாநில சிலம்பப் போட்டி:பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி முதலிடம்

DIN

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று தங்கம் வென்றனா்.

வோ்ல்ட் யூனியன் சிலம்பம் பெடரேஷன் சாா்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் மேலூா் ஆா்.வி .மெட்ரிக் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில், இப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா்

ப. தமிழரசு பங்கேற்று, தொடு சிலம்பப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். ஒன்பதாம் வகுப்பு மாணவா் ஆா்.எம்.பொன். பிரபாகரன், சிங்கிள் ஸ்டிக் மற்றும் வேல் கம்பு சிலம்பப் போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். ஒன்பதாம் வகுப்பு மாணவா் வி. வசந்தகுமாா் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சியாளா்கள் வீரையா, பிரகாஷ் ஆகியோரை பள்ளியின் முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT