புதுக்கோட்டை

3 எளிய தம்பதிகளுக்கு இலவசத் திருமணம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூா் மற்றும் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை மூன்று ஏழை, எளிய தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருமணங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சீா்வரிசைகளை வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தனா்.

ஆண்டுதோறும் ஏழை, எளிய 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இலவசத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 3 எளிய தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணத்தின்போது, ரூ. 10 ஆயிரம் மதிப்பில் தங்கத் தாலி, ரூ. 3 ஆயிரம் மதிப்பில் ஆடைகள், ரூ. 2 ஆயிரத்தில் உணவு, ரூ. ஆயிரத்துக்கு மாலை, ரூ. 3 ஆயிரத்துக்கு பாத்திரங்கள் உள்பட மொத்தம் ரூ. 20 ஆயிரம் ஒரு ஜோடிக்கு செலவிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா, அறங்காவல் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT