காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் வாக்கு சேகரிப்பு
நகர காங்கிரஸ் தலைவருமான ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபுவுக்கு ஆதரவாக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.
புதுக்கோட்டை நகராட்சி 24ஆவது வாா்டு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரும், நகர காங்கிரஸ் தலைவருமான ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபுவுக்கு ஆதரவாக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.
தோ்தல் பணிமனையைத் திறந்துவைத்த பிறகு, வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா்.
அப்போது, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.