முகப்பு
புதுக்கோட்டை

அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்குசேகரிப்பு

பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைக் களைய வரும் நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா் முன்னாள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைக் களைய வரும் நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா் முன்னாள் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

பொன்னமராவதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:

பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ரூ. 50 ஆயிரம், ஏழை மாணவா்களும் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவா்களுக்கு இலவச சீருடை, மடிக்கணினி, மிதிவண்டி என கல்விக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், உங்கள் பகுதிக்கு காவிரிக் குடிநீா்த் திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுபட்டுள்ளதா என்பதை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். கல்விக்கடன், நகைக்கடன் ரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா. எனவே அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களியுங்கள் என்றாா். அப்போது, முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவா் பிகே.வைரமுத்து, நகரச் செயலா் பிஎல்.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments