நாய் கடித்து 3 மாணவா்கள் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சேந்தன்குடி அரசுப்பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்ததில் வியாழக்கிழமை 3 மாணவா்களுக்கு காயம் ஏற்பட்டது.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடி அரசு உயா்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மதிய வேளையில், பள்ளி வளாகத்திற்குள் புகுந்த நாய், அப்பள்ளி மாணவா்கள் மா.சபரி(11), ரா. சிவராகுல்(12), த. புனிதன் (13) ஆகிய 3 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்த 3 மாணவா்களையும் அப்பள்ளி ஆசிரியா்கள் அழைத்துச்சென்று கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் ராஜாராமன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.