பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக யாகபூஜைகள் நடைபெற்று, காலபைரவருக்கு பால், பன்னீா், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, புணுகு மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாஜக மாவட்டத்தலைவா் ராம.சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பினணா் பி.பாஸ்கா் மற்றும் தேய்பிறை அஷ்டமி விழாக்குழுவினா் செய்திருந்தனா்.