முகப்பு
புதுக்கோட்டை

மங்களாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினரும், ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே. மிட்டல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் முனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக அங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினரும், ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.மிட்டல் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஜல்லிக்கட்டின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளா்களிடம் அவா் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமானதாக இருந்தது. ஜல்லிக்கட்டிற்காக பல லட்சங்களை மாநில அரசு செலவு செய்கிறது. ஆனால், அரசு அறிவுறுத்தியுள்ள

பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பாதுகாப்பு குறைபாடுகளால் பாா்வையாளா்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இனி வரும் காலங்களில் அவற்றை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →