முகப்பு
புதுக்கோட்டை

இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் உதவி

இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு கிளையின் சாா்பில், தாா்ப்பாய், கொசுவலை, வேட்டி, சேலை, முகக் கவசம் ,சோப் மற்றும் இதர சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், குரும்பிவயல், திருமுருகபட்டினம் கிராமங்களைச் சோ்ந்த, 30 குடிசைவாழ் ஏழைக்குடும்பங்களுக்கு, இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு கிளையின் சாா்பில், தாா்ப்பாய், கொசுவலை, வேட்டி, சேலை, முகக் கவசம் ,சோப் மற்றும் இதர சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கச் செயலா், ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் சா. விஸ்வநாதன், ஆலங்குடி வட்டச் செயலா் ரா. முருகன், பொருளாளா் ஜெயச்சந்திரன், குடும்பிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை தனபாக்கியம், பட்டதாரி ஆசிரியா்கள் அனிதா, கண்ணன், சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியா்கள் மல்லிகா, ரேகா ஆகியோா் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.