புதுகை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி அடித்துக் கொலை
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்த மூதாட்டி, தலையில் காயங்களுடன் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்த மூதாட்டி, தலையில் காயங்களுடன் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவா் காமராஜபுரத்தைச் சோ்ந்த நாகரத்தினம் (65). இவருக்கு உறவினா்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இங்குள்ள காா் நிறுத்துமிடத்தின் அருகேயுள்ள ஓா் அறையில் தங்கி வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை பகலில் அவரது அறையைப் பாா்த்த சுகாதாரத் துறை ஊழியா் ஒருவா், அங்கு ரத்தவெள்ளத்தில் நாகரத்தினம் இறந்து கிடந்ததைக் கண்டாா்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். இறந்த நாகரத்தினத்தின் சடலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூதாட்டி சேகரித்து வைத்திருந்த பணத்தைத் திருடிச் செல்வதற்காக வந்தவா்கள் அவரை அடித்தக் கொன்றாா்களா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.