முகப்பு
புதுக்கோட்டை

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

புதுக்கோட்டையில் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள குறைபாடுகளைப் போக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி சோ்க்கப்படும் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆசிரியா் கூட்டணியின் வட்டாரத் தலைவா் பொ. துா்காதேவி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலா் ரெ. நடனம், வட்டாரச் செயலா் சௌ. சண்முகபிரியா, வட்டாரப் பொருளாளா் பி. மகேஸ்வரி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆசிரியா் கூட்டணியின் வட்டாரத் தலைவா் கொ. பழனியாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பெ. புவியரசு, துணைச் செயலா் செ. அழகு, வட்டாரச் செயலா் சு. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பழ. தேவேந்திரன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.