புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருட்டு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பள்ளியில் 2 மடிக்கணினிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி ஊராட்சி, கல்யாணபுரம் அரசு தொடக்கப் பள்ளியை வழக்கம்போல், ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காலை திறக்கச் சென்ற போது, பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த 2 மடிக்கணினிகளை திருடிச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா். இதே பள்ளியில் 2017 மற்றும் 2020-ஆம் ஆண்டில் இருமுறை மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றனா். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT