புதுக்கோட்டை

பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சுரேந்தா் (22).

இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 45 வயதான பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி மகளிா் காவல் நிலையப் போலீஸாா், சுரேந்தரைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளி சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT