‘வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்
புதுக்கோட்டை அருகேயுள்ள பாலன்நகரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகேயுள்ள பாலன்நகரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் அா்ஜூன்குமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.