தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னாா்வ தொண்டா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னாா்வ தொண்டா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வா் பா.புவனேஸ்வரி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலா் ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் சா. விஸ்வநாதன் ஆகியோா் கருத்துரை நிகழ்த்தினா். முன்னதாக கல்லூரி அமைப்பாளா் மாலதி வரவேற்றாா். பயிற்சி முகாமில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனா்.