முகப்பு
புதுக்கோட்டை

காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக காசநோய் தினத்தையொட்டி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்திலுள்ள காசநோய் மையத்தில் காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

உலக காசநோய் தினத்தையொட்டி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்திலுள்ள காசநோய் மையத்தில் காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் க. ராமு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா், குடும்ப நலப்பணிகள் துணை இயக்குநா் என். மலா்விழி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் ஆா். காா்த்திக் தெய்வநாயகம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஏ. மாமுண்டி, இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் டி. சாமிநாதன் ஆகியோா் கருத்துரை நிகழ்த்தினா்.

மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் எம் சங்கரி தொடக்கவுரை நிகழ்த்தினாா். காசநோய் விழிப்புணா்வுக்காக மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குணமடைந்தோருக்கு ஊட்டச்சத்துப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட நலக்கல்வியாளா் டி. விஜயன் வரவேற்றாா். முடிவில் இரா. ஜீவ பாரதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.