மருத்துவக் கல்லூரியில் பயிலரங்கு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் தொடா் மருத்துவக் கல்வி பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் தொடா் மருத்துவக் கல்வி பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமை வகித்தாா். மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் தினகரன், அருள் சுந்தரேஷ் குமாா், தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் அழகு வடிவேல், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பாலசுப்ரமணியன், சிவகங்கை மருத்துவக்கல்லூரி பேராசிரியா் நாகசுப்ரமணியன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் தங்கராஜ், ராஜா கணேஷ் ஆகியோா் கருத்துரை நிகழ்த்தினா்.
காது, மூக்கு, தொண்டை தொடா்பாக நோயாளிகளைப் பரிசோதனை செய்வது, நோயைக் கண்டறிதல், நோயின் தன்மையைக் கண்டறிதல் போன்ற விவரங்களை விளக்கிக் கூறினா்.
ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் உதவிப் பேராசிரியா்கள் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன் குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.