முகப்பு
புதுக்கோட்டை

முன்னாள் படைவீரா் குடும்பத்தினருக்கு ரூ. 2.60 லட்சம் கல்வி உதவி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் 13 பேருக்கு மொத்தம் ரூ. 2.60 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் 13 பேருக்கு மொத்தம் ரூ. 2.60 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்புக் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது இந்த உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக முன்னாள் படைவீரா்களிடமிருந்து 29 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் தி.கி. செண்பகவல்லி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.