புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு விதிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்

DIN

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய கால்நடைகள் நல வாரியத்தின் ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினரும், கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே. மிட்டல் அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவா் இதனை வலியுறுத்தினாா். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கால்நடைகளுக்கு எவ்வித துன்புறுத்தலும் இருக்கக் கூடாது என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மருத்துவா் சம்பத், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT