நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. சுப்பையா, கண்காணிப்பாளா் சீ. ரவிச்சந்திரன், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் அனைத்து நிலையில் உள்ளவா்களுக்கும் விரைந்து முதுநிலை பட்டியலை வெளியிட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயா்வுகள் வழங்க வேண்டும் .
நெடுஞ்சாலைத் துறையில் கலந்தாய்வு மூலம் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் உள்ள நிலை வரை தொழில் அலுவலா் மற்றும் பதிவுறு எழுத்தா் உள்ளிட்ட அனைத்து காலி ப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் .
கோட்ட கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.