புதுக்கோட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்க மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுநா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

DIN

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்க மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுநா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்ந்து 24 மணி நேரமும் செயலாற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவைகள், சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் சிறப்பு மருத்துவ வல்லுநா் குழு மருத்துவா்கள் நிரஞ்சன் ரெட்டி, டெபஜோதி மஜும்தாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு நடத்தினா்.

நிகழ்வில் துணை இயக்குநா் ராம் கணேஷ் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா்கள் பிருந்தாதேவி, பிரியதா்ஷினி, நிவின், பிரியங்கா மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் செல்வராஜ், மாரிக்கண்னு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT