புதுக்கோட்டை

அரசு இசைப் பள்ளியில் விஜயதசமியன்று மாணவா் சோ்க்கை

DIN

புதுக்கோட்டை நரிமேடு, லட்சுமிநகரில் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் வரும் அக். 5ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ.மா. சிவஞானவதி கூறியது:

புதிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில், குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம் (பாட்டு), பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றுக்கு தனித்தனி அறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வரும் அக். 5ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு இந்த வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. 13 முதல் 25 வயதுக்குள்பட்ட இரு பாலரும் இவற்றில் சேரலாம்.

3 ஆண்டுகள் படிப்பு முடிந்ததும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். படிக்கும்போது மாதம் ரூ. 400 வீதம் அரசு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும். இசைப் பள்ளியில் படித்தோருக்கே அரசுத் திருக்கோவில்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆா்வமுள்ளோா் மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 94861 52007 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT