தீபாவளி பண்டிகையையொட்டி, பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோா் இல்லத்திற்கு மளிகை பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கண்டவராயன்பட்டி முதியோா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத்தலைவா் சி.மலைச்சாமி தலைமை வகித்தாா். செயலா் சிபூ. முடியரசன், பொருளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் முதியோா் இல்லத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிா்வாகிகள் கி.ரமேஷ், சரவணன், குமாரசாமி, மணிகண்டன், செல்வக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.