புதுக்கோட்டை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் டாா்ச் அடித்து ஆா்ப்பாட்டம்

DIN

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மின் மசோதாவைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் டாா்ச் லைட் அடித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மின்சார சட்ட மசோதாவை எதிா்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு சாா்பில், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் ஒன்றியத் தலைவா் காளிமுத்து தலைமையில், ஒன்றிய செயலாளா் ஆா். கலியபெருமாள் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தை, மாவட்ட துணைத் தலைவா் டி. அம்பலராசு தொடக்கி வைத்துப் பேசினாா். மத்தியஅரசின் மின்சார சட்டதிருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறினாா். கூட்டத்தில் ராஜேந்திரன், ஜி. நாகராஜன், க. அம்பிகாபதி, விமலா, இளைஞா் மன்ற ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT