முகப்பு
புதுக்கோட்டை

தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவதற்கான தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவதற்கான தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது ரூ. 5 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பணியாற்றியோா் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

சுய விவரக் குறிப்பு, முழுமையான முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் சமூக நீதிக்காக பாடுபட்டதற்கான விவரங்களுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து வரும் செப். 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், புதுக்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.