லாட்டரி விற்ற இருவா் கைது
ஆலங்குடி அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட புளிச்சங்காடு கைகாட்டியைச் சோ்ந்த எஸ். ராமகிருஷ்ணன் (69), துலுக்கவிடுதியைச் சோ்ந்த ஜி. ஜெய்சங்கா் (55) ஆகிய இருவரையும் வடகாடு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.