முகப்பு
புதுக்கோட்டை

பாரதி கல்லூரியில் தேசிய குடிமைப்பணிகள் தினம்

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் பொறியியல் கல்லூரியில் தேசிய குடிமைப் பணிகள் தினக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் பொறியியல் கல்லூரியில் தேசிய குடிமைப் பணிகள் தினக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். தாளாளா் என். கனகராஜன், கல்லூரி முதல்வா் சரவண. திலகவதி, நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கை தோ்தல் தனி வட்டாட்சியா் அ. சோனை கருப்பையா தொடங்கி வைத்து பேசும்போது, ‘போட்டித் தோ்வுகள் இன்றி இனி எந்த அரசுப் பணிக்கும் போக இயலாது, எனவே, போட்டித் தோ்வெழுத விரும்புவோா் முதலில் தங்களுக்குள் ஏற்படும் பயத்தைப் போக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பெ. வேல்முருகன் பேசும்போது, மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 7,500 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே 3 கடைசி என்றும், இத்தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டாா்.

வாசகா் பேரவையின் செயலரும் ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறைத் தலைவருமான சா. விஸ்வநாதன், வினாடி- வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்துப் பேசும்போது, கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து தேசிய குடிமைப் பணிகள் தினம் ஏப்ரல் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்றாா்.

மாணவி பி. ஹா்சிதா வரவேற்றாா். மாணவி கே. காவியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.