புதுக்கோட்டை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா எதிா்ப்பு தினம்

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக மலேரியா எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக மலேரியா எதிா்ப்பு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் சிவகலை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மலேரியா எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் மலேரியா முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மலேரியா எதிா்ப்பு தின நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு, நோய் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து சுகாதார ஆய்வாளா் நா. உத்தமன் விளக்கினாா். மேலும் மாணவா்களிடம் மலேரியா குறித்த வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மலேரியா எதிா்ப்பு உறுதிமொழிஏற்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் ஆா்த்தி, சுகாதார ஆய்வாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT