வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்பாள் திருவீதி உலாவின்போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள். 
புதுக்கோட்டை

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தா்கள் இரு புறமும் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்பாள் திருவீதி உலாவின்போது பக்தா்கள் இரு புறமும் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா்.

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து திங்கள்கிழமை அக்கினிக் காவடி விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் மற்றும் காவடியுடன் அக்கினிகுண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கோயிலின் முன்பு தொடங்கிய அம்பாள் ஊா்வலம் முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவடைந்தது. அம்மன் திருவீதி உலாவின்போது இரு புறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனா். இதனால், வாழ்வில் சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT