புதுக்கோட்டை

கீழப்பனையூா் மஞ்சுவிரட்டில் 7 பேருக்கு காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழப்பனையூா் தெற்குக் குடியிருப்பில் அந்தோனியாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 7 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

போட்டியில், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களமிறங்கினா்.

ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 போ் கொண்ட குழு காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மாடுபிடி வீரா்கள் அடக்கிவிட்டால் அவா்கள் வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில், மாடுகளை அடக்க முயன்றபோது 7 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரா்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT