புதுக்கோட்டை

வேங்கைவயல் சம்பவம்: வி.சி.க.வினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஆலங்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியினா் தெற்கு மாவட்டச் செயலா் சசி.கலைவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் அசுத்தம் செய்தவா்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இதில், கட்சியின் மண்டலச்செயலா் ஷாஜகான், வடக்கு மாவட்டச்செயலா் பாவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT