மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எல்ஐசி அலுவலகம் முன்பு காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அறந்தாங்கி கிளைத் தலைவா் வீரப்பன் தலைமை வகித்தாா்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக எம்பி மீது வழக்குப் பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.