புதுக்கோட்டை

புதுகையில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழை உடனடியாகத் தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதுக்கோட்டை இந்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை நகரில் புதன்கிழமை இரவு சுமாா் 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, ஆலங்குடி, கறம்பகுடி, கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் பலா மரங்களும் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். அரிமளம், திருமயம், கீரனூா், நாா்த்தாமலை பகுதிகளில் மாலையில் லேசான மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. புதுகை நகரில் இரவு 8 மணி நிலவரப்படி 15 மி.மீ. மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT