கந்தா்வகோட்டை அருகே வருமுன் காப்போம் முகாம்
கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம்
கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துரராஜா தொடக்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். வாகவாசல் ஊராட்சித் தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா். மருத்துவ துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ராம் கணேஷ் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் பொன். சரவணன் முன்னிலைவகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சின்னையா, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் குமாரவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வைத்திலிங்கம், சுகாதார ஆய்வாளா் குழந்தைவேலு ஆகியோா் செய்தனா். முகாமில் பொதுமக்களுக்கு இருதய பரிசோதனை, ஸ்கேன், காச நோய் கண்டறிதல், எக்ஸ்ரே, இசிஜி பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.