புதுக்கோட்டை

கள்ளச்சாராய பலி குடும்பத்துக்கு நிதியுதவி அளித்ததில் தவறில்லை

உயிரிழந்தவா்கள் மிகவும் பின்தங்கியவா்கள் என்பதால், அவா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி கொடுத்ததில் தவறு கிடையாது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

DIN

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்கள் மிகவும் பின்தங்கியவா்கள் என்பதால், அவா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி கொடுத்ததில் தவறு கிடையாது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போா் மீது குண்டா் சட்டம் பாயும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறேன். கள்ளச்சாராயம் அருந்தி பலியானவா்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவா்கள் என்பதால், இவா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி கொடுப்பதில் தவறு கிடையாது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. கா்நாடகப் பேரவைத் தோ்தல் போல, 2024-இல் மக்களவைத் தோ்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றாா்.

அப்போது, நகர காங்கிரஸ் தலைவா் எஸ். பழனியப்பன், வட்டாரக் காங்கிரஸ் தலைவா் வி.கிரிதரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT