புதுக்கோட்டை

பொன்னமராவதியில் காலை உணவுத் திட்டம் ஆலோசனை

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த வட்டார அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த வட்டார அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றிய ஆணையா் பி. தங்கராஜூ தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி ஆணையா் து. குமரன் தலைமைவகித்தாா். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த செயல்பாடுகள் குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் விளக்கினாா். கூட்டத்தில், காலை சிற்றுண்டி தயாா் செய்யும் பணியாளா்கள் தோ்வு முறை, மாணவா்களுக்குத் தேவையான தட்டு மற்றும் குடிநீா் குவளை வழங்குதல், சமையல் கூடத்துக்குத் தேவையான வசதிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த ஊராட்சித் தலைவா்கள் முழு முயற்சி எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சிசெயலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT