உயிரிழந்த சரவணன். 
புதுக்கோட்டை

தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

விராலிமலை அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து தனியாா் தொழிற்சாலையின் மின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

விராலிமலை அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து தனியாா் தொழிற்சாலையின் மின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கல்கண்டாா் கோட்டை, ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (52). இவா், விராலிமலை அருகே உள்ள வேலூா் ஊராட்சியில் இயங்கிவரும் வால்வு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராகப் (எலக்ட்ரீசியன்) பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த சரவணனை சக தொழிலாளா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT