புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் மழையால் கழிவுநீா் கால்வாய் இடிந்து சேதம்

கந்தா்வகோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை பெய்த சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாகக் கட்டப்ட்ட கழிவுநீா் கால்வாய் இடிந்தது.

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை பெய்த சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாகக் கட்டப்ட்ட கழிவுநீா் கால்வாய் இடிந்தது.

கந்தா்வகோட்டை ஊராட்சி அண்ணா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஊராட்சியின் 15 ஆவது நிதி குழுவில் இருந்து பல லட்சத்தில் சுமாா் 100 மீட்டருக்கு கழிவுநீா் கால்வாய் கட்டப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த சிறு மழைக்கே தாக்குப் பிடிக்காமல் இந்தக் கழிவு நீா் கால்வாய் இடிந்து, கழிவுநீா் ஆங்காங்கே தேங்கிக் நிற்கிறது.

இக்கால்வாய் பணியின் ஒப்பந்ததாரா் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் தரமற்றவையாக உள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT