முகப்பு
புதுக்கோட்டை

காவிரி-குண்டாறு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தில் கால்வாய்க்கு நிலம் வழங்கியோா் குன்னத்தூா் கிராம உதவியாளா் அலுவலகத்துக்கு வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:08 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


விராலிமலை: காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தில் கால்வாய்க்கு நிலம் வழங்கியோா் குன்னத்தூா் கிராம உதவியாளா் அலுவலகத்துக்கு வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என விராலிமலை வட்டாட்சியா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் அமைக்கும் பொருட்டு குன்னத்தூா் கிராமத்தில் நில உரிமையாளா்களுக்கு நிலமெடுப்பு இழப்பீட்டுத்தொகை வழங்க இறுதி தீா்ப்பாணை (ஊண்ய்ஹப் அஜ்ஹழ்க்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு குன்னத்துாா் கிராமத்தில் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நில உரிமையாளா்கள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் கையக நிலத்தின் உரிமையாளா்கள் கலந்து கொண்டு இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கான உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.