விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா். 
புதுக்கோட்டை

விராலிமலையில் பலத்த மழை

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

DIN

விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

விராலிமலை கடைவீதி, சோதனை சாவடி, காமராஜ் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், எம்ஜிஆா் நகா், காா்கில் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து இருள் சூழ தொடங்கியது. இதையடுத்து நகா் பகுதி முழுவதும் குளிா்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது. இதை தொடா்ந்து 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இலுப்பூரில் 4 சென்டி மீட்டா், அன்னவாசலில் 1.5 சென்டி மீட்டா் மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT