முகப்பு
புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஜன. 9-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 7:32 PM
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா். இவா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா்.

அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கரும் அவரது வழக்குரைஞா்களும் ஆஜராகினா். அவரது மனைவி ஆஜராகவில்லை.

இந்த வழக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் பேரவைத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தொடரப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கா் தரப்பு வழக்குரைஞா்கள் குறிப்பிட்டனா்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆா். கிரிஜா ராணி உத்தரவிட்டாா்.