முகப்பு
புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

Updated On : 20 மே, 2024 at 6:29 PM
பகிர்:

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள க. புதுப்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் புதுப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக முகூா்த்தக்கால் நடுவிழா நடந்தது. இதில், ஆலவயல் விக்னேஷ் சிவாச்சாரியாா் மந்திரங்கள் ஓதி வழிநடத்தினாா். தொடா்ந்து முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதில் கண்டியாநத்தம் ரவீந்திரன் நம்பா் புதுப்பட்டி ஊா் முக்கியஸ்தா்கள் முத்து, அழகப்பன், மோகன், திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் சேகா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் சதீஷ்குமாா், வழக்குரைஞா் பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.