விராலிமலையில் பலத்த மழை
விராலிமலை: விராலிமலையில் திங்கள்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரியவா்கள், சிறியவா்கள் வயது முதிா்ந்தோா் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனா். இந்நிலையில், திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் மழையால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. விராலிமலையில், மூன்றாவது நாளாகத் தொடா்ந்து மழை பெய்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.