பொன்முடி இலாகா மாற்றப்பட்டதற்கு ஆளுநருடன் மோதல் போக்கு காரணமல்ல: அமைச்சா் எஸ். ரகுபதி
அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல. உயா்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு நாளன்று வேறு பணிகள் இருந்தததால் விழாவில் பங்கேற்க முடியவில்லை.
மனோ தங்கராஜ் மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சித்து வந்ததால் தான் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை. புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு அங்கிருந்த குடிநீா் குழாயில் ஏற்பட்ட பழுதுதான் காரணம்.
அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. காந்தி மண்டபத்தில் மதுப் பாட்டில்கள் கிடந்ததை ஆளுநா் குறிப்பிட்டிருக்கிறாா். இரவில் அங்கு சென்று மது அருந்துவோரை என்ன செய்ய முடியும். காலையில் சென்னை மாநகராட்சிப் பணியாளா்கள் சுத்தம் செய்துவிடுகிறாா்கள் என்றாா் ரகுபதி.