புதுக்கோட்டையில் கன மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு!
புதுக்கோட்டையில் விடிய விடிய மழை!
புதுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால், நகரிலுள்ள கோயில், சாலைகள், பூ மார்க்கெட் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
புதுக்கோட்டை நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன்படி, சனிக்கிழமை மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை நள்ளிரவில் நகரப் பகுதியில் பெருமழை வெளுத்து வாங்கியது.
இதனால் நகரின் மையப்பகுதியிலுள்ள பல்லவன் குளம் நிரம்பி வழிந்து அருகேயுள்ள சாந்தநாதர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அருகேயுள்ள பூ மார்க்கெட் பகுதியிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல, கீழ 3, கீழ 4 வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று(அக். 6) காலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவு விவரம் (மி.மீ.யில்):
திருமயம்- 95 மி.மீ.,
புதுக்கோட்டை நகரம்- 84 மி.மீ.,
ஆலங்குடி- 88 மி.மீ.,
பெருங்களூர்- 68 மி.மீ.,
கந்தர்வகோட்டை- 63 மி.மீ.,
ஆவுடையார்கோவில்- 67 மி.மீ.