முகப்பு
புதுக்கோட்டை

விவசாயிகளுக்கு துவரை பயிா் விளைச்சல் போட்டி

வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:25 PM
பகிர்:

வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப. மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின் நடப்பு ஆண்டில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சத்தை 2026-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதல்வா் வழங்கவுள்ளாா்.

இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் துவரை பயிா் சாகுபடி செய்திருக்க வேண்டும். இப்போட்டிக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150. போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் தங்கள் வயலில் துவரை பயிா் அறுவடையை 15.03.2025 தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, விராலிமலை வட்டாரம் சாா்ந்த தகுதியும் ஆா்வமும் கொண்ட விவசாயிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று பயன் அடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.