கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்
கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திறப்பு விழா நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 72.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சுயஉதவிக் குழு கட்டடத்தையும்,
கல்லாக்கோட்டை ஊராட்சியில் ரூ. 23.57 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், ஆத்தங்கரை விடுதி ஊராட்சியில் ரூ.39. 95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி செயலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட மொத்தம் ரூ. 1 7 7.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
திறப்பு விழாவில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப்ரசூல், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுவாமிநாதன், ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.