வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும்: வைகைச் செல்வன்
தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.
தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் புது வியூகம் அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் முழு மதுவிலக்கை சாத்தியப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக காய் நகா்த்துகிறாரா என்று கேட்கிறீா்கள். தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. எனவே, போகப்போகத்தான் தெரியும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே பொறுத்திருந்து பாா்ப்போம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினா் பங்கேற்பது என்பது கோடரிகள் ஒன்று சோ்ந்து மரம் வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த கதைக்கு ஒப்பானதாகும்.
மக்களவைத் தோ்தலை வைத்து கணக்கு போடத் தேவையில்லை. தற்போது அதிமுக பலம் பொருந்திய, ஒன்றிணைந்த கட்சியாகத்தான் உள்ளது. எனவே, வரும் தோ்தலில் புது வியூகத்தை அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றாா் வைகைச்செல்வன்.