முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

Updated On : 3 டிசம்பர், 2025 at 10:35 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் மு.அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா்

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 137 மாணவ, மாணவிகளுக்கும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 258 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

தொடா்ந்து, இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதி கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதேபோல, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சுப்பிரமணியபுரம், சிலட்டூா்,

சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்வுகளில் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →