புதுக்கோட்டை

விராலிமலை அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாலையை சனிக்கிழமை கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள பூச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் மணியழகா் (34). கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் விராலிமலை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலையைக் கடந்தபோது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற காா் மோதி பலத்த காயம் அடைந்தாா்.

இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT