பொன்னமராவதி அருகேயுள்ள வாழைக்குறிச்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதில், சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப் பெருமாள் பரமபதவாசலை கடந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், பொன்னமராவதி அழகப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு விழாவில் திரளானோா் பங்கேற்றனா். மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.